செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் படூர் முதல் நிலை ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான நேற்று ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டது. படூர் ஊராட்சி மன்ற தலைவர் கே ஏ எஸ்.தாராசுதாகர் பள்ளி தலைமையாசிரியர் மகாலட்சுமி தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும், தனித்திறனிலும் சிறந்து விளங்க வேண்டும். அதுவே நீங்கள் எங்களுக்கு தரும் ஆசிரியர் தின பரிசு என கூறினார்.
பள்ளி ஆசிரியர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா சேட்டு (அசோக்) ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ரேகா சேகர் உமா மகேஸ்வரி ரமேஷ் அவர்கள் ஜெயந்தி தசரதன் மற்றும் , மாணவ, மாணவிகள் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக