நோட்டாவிற்கே வாக்களிப்போம்! சிதைக்கப்பட்ட புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி.. தொகுதி சீரமைப்பால் தவிக்கும் மக்களின் ஆதங்கம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

நோட்டாவிற்கே வாக்களிப்போம்! சிதைக்கப்பட்ட புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி.. தொகுதி சீரமைப்பால் தவிக்கும் மக்களின் ஆதங்கம்!

தொகுதி மறு சீரமைப்பில் நாடாளுமன்ற தொகுதி அந்தஸ்து பறிபோனதால், தனித்தனியாக 4 மாவட்ட எம்பிக்களை சந்திக்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். எங்கள் மாவட்டமான புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை திருச்சி, கரூர், சிவகங்கை இராமநாதபுரம் என்கிற வகையில் கூறு போட்டு சூறையாடிய, மைய மாநில அரசுகள், இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியோரும் பரிசீலனை செய்து மீண்டும், 'எங்களது நாடாளுமன்ற தொகுதியை எங்களிடமே கொடுத்து விடுங்கள்' என குமுறும் புதுக்கோட்டை மக்களின் கோரிக்கை நிறைவேறுமா? மக்களின் கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மீண்டும் உதயமாகுமா?.என்பது புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கோரிக்கையாக உள்ளது.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/