சோளிங்கர் நகராட்சி கிழக்கு பஜார் வீதியின் அவல நிலை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

சோளிங்கர் நகராட்சி கிழக்கு பஜார் வீதியின் அவல நிலை.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி கிழக்கு பஜார் வீதியின் அவல நிலைகளை குறித்து பொதுமக்கள் கூறியதாவது  கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நேரங்களில் வெள்ள நீர்  சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதாகவும்,  துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சரிவர வாங்குவதும் இல்லை அகற்றுவதும்  இல்லை என்கின்றனர்,  வடிநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பெரியவர்கள் குழந்தைகள் விழுந்து விடுவதாகவும், சிசிடிவி கேமரா உடைந்து தரையில் பார்த்து தொங்கிக் கொண்டிருப்பதாகவும் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதாகவும்  புலம்புகின்றனர் அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி நிர்வாகம் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று  குற்றம் சாட்டுகின்றனர்.


- செய்தியாளர் எஸ்.ஆனந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/