பல்வேறு திட்டப்பணிகள் சட்ட மன்ற உறுப்பினர் திறந்துவைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

பல்வேறு திட்டப்பணிகள் சட்ட மன்ற உறுப்பினர் திறந்துவைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட செலந்தம்பள்ளி ஊராட்சியில், 1)ஊராட்சி மன்ற கட்டிட அலுவலக பெயர் பலகை 2) 15 வது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து சுமார் 1.86 லட்சத்தில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் 3) அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 4.40 லட்சம் மதிப்பீட்டில் கருணாநிதி வீடு முதல் உதயகுமார் வீடு வரை 95 m பேவர் பிளாக் சாலை, 4)அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 2.40 லட்சம் மதிப்பீட்டில் பூபதி வீடு முதல் சீனிவாசன் வீடு வரை 52m பேவர் பிளாக் சாலை, 5) அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 1.35 லட்சம் வீட்டில் தர்மன் வீடு முதல் வெங்கடேசன் வீடு வரை 31m பேவர் பிளாக் சாலை, ஆகிய பணிகள் முழுவதும் நிறைவடைந்து திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்A நல்லதம்பி அவர்களால் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் மற்றும் கருணாநிதி, பொறியாளர் தொட்லாமா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அருணாசலம், ஒன்றிய குழு துணை தலைவர் டி ஆர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் சுபாஷ் சந்திர போஸ், மாவட்ட தொண்டர் அணி தலைவர் ராமச்சந்திரன், மாவட்டக் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் அன்பழகன், ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் எஸ் சி விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி சிவலிங்கம், செல்வராஜ்,ரகு, சின்னபையன், ஆசிரியர் பிச்சாண்டி, உமாகாந்தன், ஊராட்சி மன்ற தலைவர்,துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/