சோழவந்தானில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 செப்டம்பர், 2023

சோழவந்தானில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது:

மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை புறநகர் மாவட்ட குழு சார்பில், சோழவந்தானில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, நீட் தேர்வு ரத்து, இந்தி திணிப்பு, தமிழ் புறக்கணிப்பு, தமிழக ஆளுநரை திரும்ப பெறக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சோழவந்தான் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/