ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அகவலம் பகுதியில் மக்கள் தேசம் கட்சியின் கிளை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் அகவலம் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைச்செயலாளர் விமல்குமார், மாவட்ட தலைவர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி கலந்துகொண்டார்.
இதில் அக்கட்சியின் மாநில மாணவர் அணி செயலாளர் பிரசாந்த், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மதியழகன், மாவட்ட இளைஞர் அணி இராமே. பசுபதி, ஜே. விஜய், சோளிங்கர் தொகுதி செயலாளர் சரத்குமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வசந்த், மாவட்ட செயலாளர். விவேகானந்தன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் அசோகன், நெமிலி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக