இராணிப்பேட்டை மாவட்டம் கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலவை பஜார் பகுதியில் கமலக் கன்னியம்மாள் கிளினிக் என்ற பெயரில் தனியார் கிளினிக் நடத்தி வரும் விக்னேஷ் என்பவர் கலவை பஜாரில் மருந்தகம் நடத்தி வரும் இராணிப்பேட்டையை சேர்ந்த அஜிஸ், ரபீக் என்பவர்கள் மருந்தகத்தில் போலி மருத்துவம் பார்ப்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் இராணிப்பேட்டை சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு புகார் செய்ததால் விக்னேஷ்-பை அவரின் கிளினிக்கில் வைத்து ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.
மேற்படி சம்பவம் குறித்து விக்னேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., உத்தரவின் படி எதிரிகளான 1) அஜிஸ் மற்றும் 2) ரபீக் (எ) ரவிச்சந்திரன் என்பவர்கள் மீது கலவை காவல் நிலையத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக