குடியாத்தம் மேல் ஆலத்துர் நவாப் பெரிய மசூதியில் இலவச கண் பரிசோதனை முகாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 செப்டம்பர், 2023

குடியாத்தம் மேல் ஆலத்துர் நவாப் பெரிய மசூதியில் இலவச கண் பரிசோதனை முகாம்.

photo_2023-09-25_19-56-26

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேல் ஆலத்தூரில் நவாப் மசூதியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. தமுமுகவின் 29 ஆம் ஆண்டை முன்னிட்டு   வேலுர் மேற்கு மாவட்டம் குடியாத்தம்  ஒன்றியம் மேல் ஆலத்தூர் மற்றும் கூடநகரம் கிளை மற்றும் மாவட்ட பார்வை இழப்போர் தடுப்பு சங்கம், வேலூர் SIH-R & LC கரிகிரி மருத்துவமனை சார்பாக மேல் ஆலத்துர் நவாப் மஸ்ஜித்தில் (பெரிய மசூதி) இலவச கண் பறிசோதனை  முகாம் நடைபெற்றது.

 

மாவட்டத் தலைவர் P.S.நிஜாமுத்தின் தலைமை தாங்கினார், ஒன்றிய தலைவர் ஷஹாபுத்தீன் அனைவரையும் வரவேற்றார், மாவட்ட துணை செயலளர் சான் பாஷா, ஒன்றிய துணை செயலார்கள் S.பாஷா, R.முஹம்மத் ரபிக், S.முஜம்மில், M.இர்ஷாத், நிஜாம் நகரத் தலைவர் சிக்கந்தர் பாஷா துணைச் செயலாளர் இம்ரான், கிளைத் தலைவர் முஹம்மத் சவுத், எசானுல்லா, முஹம்மத் இஷாக், முர்த்தஜா, பாரூக் பாஷா, பைஜான் இம்ரான், லாலு, அஷ்ஷு, ஹஸ்ரத் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் .


மாநிலச் செயலாளர் வேலூர்  J.எஜாஸ் அஹமத் அவர்கள் முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக ஜனாப் N.R.தாஜீத்தின், சாஹெப் முத்தவல்லி நாவாப் மஸ்ஜித், P.தாஹா முஹம்மத், மாநிலதுணைசெயலாளர் மருத்துவ சேவை அணி E.இக்பால், மாவட்ட செயலாளர் தமுமுக&தாளாளர் மதரஸா யே ஸிராதுல் உலூம் ஜனாப், S.A.பையாஸ் அஹமத் சாஹெப் செயலாளர் நாவாப் மஸ்ஜித், ஆகியோர் பங்கேற்றனர். 


இம் முகாமில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் 21 பேர் கண் அறுவை சிகிச்சை  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad