இந்நிலையில் இதன் அருகில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்காக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.கடந்த ஆண்டு பெய்த மழையின் போது மன் அளிக்கப்பட்டு மிகவும் பழுதானது அதன் பிறகு மீண்டும் சீரமைக்காமல் அப்படியே குண்டும் குழியுமாக கிடக்கிறது இந்நிலையில் அந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது வெயில் காலங்களில் தூசுகள் புகை மண்டலமாகவும் .மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்லும் போது மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதனைப் போலவே பேராவூரணி அரசு கல்லூரி சமத்துவபுரம் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அருகில் மாற்றுப்பாதை அமைக்கப்டது இதுவும் மன்சாலையாக இருப்பதால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயனம் செய்ய முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர் எனவே நெடுஞ்சாலை துறையினர் இதை கவனத்தில் தொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
- செய்தியாளர் த.நீலகண்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக