திருக்களம்பூர் ஊராட்சி, மேலக்களம் கிராமத்தில் டெங்கு_மற்றும் தொற்றும்தொற்றா நோய்கள் குறித்த சுகாதார விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

திருக்களம்பூர் ஊராட்சி, மேலக்களம் கிராமத்தில் டெங்கு_மற்றும் தொற்றும்தொற்றா நோய்கள் குறித்த சுகாதார விழிப்புணர்வு முகாம்.

திருக்களம்பூர் ஊராட்சி, மேலக்களம்  கிராமத்தில் டெங்கு_மற்றும் தொற்றும்தொற்றா நோய்கள் குறித்த சுகாதார விழிப்புணர்வு முகாம்.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரம் திருக்களம்பூர் ஊராட்சி, மேலக்களம் கிராமம் மேலைச்சிவபுரி ஊராட்சி மேலைச்சிவபுரிகிராமம் ஆகிய இரு வேறு இடங்களில், டெங்கு மற்றும் தொற்றும் தொற்றா நோய்கள் குறித்த சுகாதார விழிப்புணர்வு முகாம், பொதுமக்களுக்கு மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக 16.9.23 சனிக்கிழமை யாகிய இன்று டெங்கு காய்ச்சல் குறித்த விரிவான விழிப்புணர்வும்  ஏடிஸ் கொசுப் புழுவை காண்பித்து நேரடி செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.


இரு இடங்களிலும் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர், அதனை தொடர்ந்து தொற்றும் & தொற்றா நோய்களான சளி இருமல் காய்ச்சல் & சர்க்கரை நோய்_ இரத்த அழுத்த நோய் பற்றியும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் 12 வாரத்திற்க்குள் கர்ப்பத்தை பதிவு செய்தலின் வழியாக பிறப்புச் சான்று பெறுதல் தொற்றும் தொற்றா நோய்களுக்காக மாத்திரை வாங்குவோர் இடைநிற்க்காமல் தொடர்ந்து வாங்கி உட்கொள்ள வேண்டியஅவசியம் ஏடிஸ் கொசுக்கள் மூலம் ஏற்படும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் முன்தடுப்பு முறைகள்/ அருகிலுள்ள மருத்துவமனைகள் பெற வேண்டிய சிகிச்சை முறைகள் ஆகியவை பற்றியும் நல்ல தண்ணீரை கொசுக்கள் புகாவண்ணம் மூடி வைத்தல்/ தொட்டியை வராவாரம்சுத்தம் செய்தல்பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் நா .உத்தமன்_விரிவாக விளக்கமளித்தார், சு. ஆ பிரேம்குமார் பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/