தமிழக முதல்வர் சிறப்பு திட்டத்தின் கீழ் அரசு பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

தமிழக முதல்வர் சிறப்பு திட்டத்தின் கீழ் அரசு பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழா.

photo_2023-09-26_17-07-56

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், தமிழக முதல்வர் சிறப்பு திட்டத்தின் கீழ், 44 லட்சம் ரூபாய், மதிப்பீட்டில் மூன்று வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு நேற்று காணொளி வாயிலாக, தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவர் அமானுல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், தி.மு.க., நகர செயலாளர் பாபு சிவகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் கதிர்வேல், சாதிக் பாஷா, ஒன்றிய அவைத் தலைவர் தணிகை குமரன், பி.டி.எ., தலைவர் கண்ணாமணி, கல்வி செயலாளர் ஜெயராமன், வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் வசந்தி, பள்ளி ஆசிரியர்கள் சக்தி, உமா, சரண்யா, சத்துணவு அமைப்பாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர், பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad