மதுரை ஆரப்பாளையம் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 செப்டம்பர், 2023

மதுரை ஆரப்பாளையம் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி

மதுரை ஆரப்பாளையம் பகுதியில், உலக தரம் வாய்ந்த டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை   மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி இணைந்து நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியானது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி, பைபாஸ் சாலை வரை நடைபெற்றது.
 
இவ்விழாவில்,  தலைமை விருந்தினராக டாக்டர். பத்திரிநாராயணன், தலைமை மருத்துவ அதிகாரி பங்குபெற்று பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். மற்றும் இந்நிகழ்வில், மண்டல பொது மேலாளர்  ஸ்ரீனிவாசன், கிளை மேலாள‌ர்   இராஜபாண்டியன், டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள், அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி மாணவர்கள் 150 நபர்கள் மற்றும் பொது மக்கள்  கலந்து கொண்டு  தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.

பேரணியில், கண்தானம் பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை, மதுரை அகர்வால் கண் மருத்துவமனை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/