திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி உட்பட்ட புதுப்பேட்டை ரோட்டில் இருந்து புதுப்பேட்டை செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மழைக்காலங்களில் எப்பொழுதும் தண்ணீர் தேங்கி கொண்டு இருக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு மாற்று பாதை அல்லது மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக