கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பாஜக கடலூர் மேற்குமாவட்டத் தலைவர் மருதை என்பவர் சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் மொத்த விற்பனைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் உரிமையாளர் கடை வியாபாரம் முடிந்து இரவில் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் இரவு சுமார் ஒரு மணி அளவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர், அதிகம் எதிர்பார்த்து கல்லாவில் கைவைத்தபோது கல்லாவில் இருந்த ரூபாய் 4,000 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.
அதிகம் இருக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த கொள்ளையன் அதை மட்டும் எடுத்துச்சென்றார். காலையில் கடைக்குச் சென்ற உரிமையாளர் மருதை பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒருவர் கடை உள்ளே சென்று வெளியே வருவது தெரிய வந்தது.இதனால் இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார்அளிக்கப்ட்டுள்ளது. போலீசார் புகார்குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக