காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருத்துவெளி காவனூர் ஊராட்சியில் ஸ்ரீ பெருமந்தூர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-2022 திட்டத்தில் ரூபாய் 11.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ஸ்ரீ பெருமந்தூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி, கல்வெட்டு திறந்து வைத்துதார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ .மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன், காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வெங்கடேசன் இனிப்புகள் வழங்கி புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக