தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உப தலைவர் தமிழ்ச் செல்வன் தலைமை வகித்து குருமனையை திறந்து வைத்தார். திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக், திருமண்டல உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆழ்வார் திருநகரி சேகரகுரு அருமைதுரை ஆரம்ப ஜெபம் செய்தார். பிள்ளையன்மனை சேகரகுரு டேனியல் ஆல்பர்ட் வரவேற்றார்.
இதில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ற்றன் ஜோசப், திருமண்டல செயற்குழு உறுப்பினர் ஷம்மா அகஸ்டின், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் திலகர், சேகர செயலாளர் அதிசயம், பொருளாளர் ஆபிரகாம் பாஸ்கரன், சபை ஊழியர்கள் டென்சிங், ஆரோன், ஆலய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் காசிராஜன், ஞானசிங், கோயில்ராஜ் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள், ஆலய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக