திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் மற்றும் வடமதுரை சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்னணியின் சார்பாக ஐம்பதற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன.
மூன்றாம் நாளான இன்று சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு அய்யலூருக்கு கொண்டுவரப்பட்டன.
அங்கு பக்தர்கள் மற்றும் பெண்கள் நடனமாடியபடி, முளைப்பாரி எடுத்து வந்து ஊர்வலமாக வடமதுரைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே இந்து முன்னணி அமைப்பின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வடமதுரை அருகே உள்ள குவாரி குளத்தில் விநாயகர் சிலைகளை கரைத்தனர்.
இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் வேடசந்தூர் டிஎஸ்பி துர்கா தேவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக