கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றியம் மேலப்பாலையூர் கிராமத்தில் புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
இதனைபுவனகிரி அதிமுக எம் எல் ஏ அருண்மொழிதேவன் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பிறகுமருங்கூர் கிராமத்தில் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய பேருந்து நிழற்குடை அதன் பின்னே உள்ள சிறு பூங்காவையும் திறந்து வைத்தார். இதற்கு அடுத்து மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய பலர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து காவனூர் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். க.தொழூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிழற்குடை முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கழக கொடி ஏற்றி,பேருந்து நிழற்குடையை திறந்து வைத்தார்.
ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அருண்மொழிதேவன் பங்கேற்று புதிய பேருந்து நிழற்குடைகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்கள் கானூர் பாலசுந்தரம், உமா மகேஸ்வரன் உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள், கிளைகழக செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக