பாளையங்கோட்டை மேல்பாதி ஊராட்சி தெற்கு பாளையம் நடுநிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத் தொடக்க விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

பாளையங்கோட்டை மேல்பாதி ஊராட்சி தெற்கு பாளையம் நடுநிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத் தொடக்க விழா.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய உட்பட்ட பாளையங்கோட்டை மேல்பாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது தலைமை ஊராட்சி மன்ற தலைவர் வினிதா முருகன் அவர்கள் தலைமையாற்றார்கள். 

பெற்றோர் கழகத் தலைவர் குழந்தைவேலு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அலமேலு சீனிவாசன்,திமுக மாவட்ட பிரதிநிதி ரவிகாந்த் அவர்கள் மேல்பாதி கிளை செயலாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர்  சா.சின்னப்பன் அனைவரையும் வரவேற்றார்கள். பட்டதாரி ஆசிரியர்  வெ. வாசுதேவன்  காலை உணவு திட்டம்  பற்றி  சிறப்புரையாற்றினார்.

பள்ளி ஆசிரியர்கள்  கற்பகம், ஜூலி கிளாரா, அன்பு கனி வனிதா  ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர். காலை உணவு திட்ட  பொறுப்பாளர்கள் அலமேலு, காவேரி,ஆனந்தி  ஆகியோர்  உணவை காலை உணவை ஏற்பாடு செய்தனர்.  தகவல் தொழில்நுட்ப இளைஞர் அணி பொறுப்பாளர் தமிழரசன் நிர்வாகி ஜெயச்சந்திரன் கிளைக் கழக செயலாளர் ரகுமான்  ஆகியோர் கலந்து கொண்டனர்.  

முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும்மாணவர்கள் அனைவருக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் காலை உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கு வருகை தந்து  சிறப்பித்த அனைவருக்கும்  பள்ளியின் ஆசிரியர்  பீட்டர் ஆனந்தராஜ் அவர்கள் நன்றி கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/