திமுகவில் பத்தாயிரம் இளைஞர்களை சேர்க்க நாகர்கோவில் மாநகர. இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

திமுகவில் பத்தாயிரம் இளைஞர்களை சேர்க்க நாகர்கோவில் மாநகர. இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு.

திமுகவில் பத்தாயிரம் இளைஞர்களை சேர்க்க நாகர்கோவில் மாநகர. இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாகர்கோவில் மாநகர இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் மாநகர அமைப்பாளர் சிடி சுரேஷ் தலைமையில் மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது .கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநகர மேயருமான.ரெ. மகேஷ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

இக்கூட்டத்தில் கழக மாநில இளைஞரணி தலைவரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி நாகர்கோவில் மாநகரில் பத்தாயிரம் இளைஞர்களை புதியதாக கழகத்தின் இணைப்பது என்றும் மாநில இளைஞரணி சார்பில் அறிவிக்கப்பட்ட மாரத்தான் போட்டியை குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணியோடு இணைந்து நடத்துவது என்றும் சேலம் மாநகரில் டிசம்பர் 17ஆம் தேதிமாநில இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தலைமையில்  நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் நாகர்கோவில் மாநகரிலிருந்து திரளாக கலந்து கொள்வது என்றும் கழக மாநில இளைஞரணி தலைவரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைக்கு பத்து கோடி தருவதாக அறிவித்த உத்தர பிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


கூட்டத்தில் மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் அகஸ்தீசன் துணை அமைப்பாளர் வக்கீல் சரவணன் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அகமது ஷா கராத்தே ராஜேஷ் அருள்செல்வின்  முத்துக்குமார் மோகன் அபிலாஷ் விசாக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/