வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியில் மதுபான கடையின் விற்பனையாளர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் இலவச மதுபானம் வழங்காததால் மர்ம நபர் ஆத்திரம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையின் விற்பனையாளர் முருகேசன் என்பவர் மது பாட்டிலை இலவசமாக வழங்காததால், ஆத்திரம் அடைந்த மர்ம நபர் ஒருவர், முருகேசனை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதனால் அவர் படுகாயமடைந்தார். இந்நிலையில் விற்பனையாளர் முருகேசன் படுகாயங்களுடன் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக