ஊழல் புரையோடி பொங்கும் காக்கங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 செப்டம்பர், 2023

ஊழல் புரையோடி பொங்கும் காக்கங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி.

திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இரவு சுமார் ஒன்பது மணிக்கு விடுமுறை நாளான இன்றும் பணி புரிவது தமிழகத்திலேயே சிறந்த விவசாய கூட்டுறவு வங்கியாக செயல்பட வேண்டும், ஆனால் தமிழகத்திலேயே மிகவும் தரம் தாழ்ந்த ஊழல் நிறைந்த குற்றவாளிகளின் கூடாரமாக செயல்படும் கூட்டுறவு வங்கி என்பது மிகவும் வருந்தத்தக்கது.

இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் குற்றத்திற்கு உடந்தையாக செயல்படுவது மிகவும் வருந்தத்தக்கது, காரணம் காக்கங்கரை கூட்டுறவு வங்கியில் தற்சமயம் பணியில் உள்ள சூப்பர்வைசர் ஊழல் குற்றச்சாட்டிற்கு உட்பட்டவர் காக்கங்கரையில் அதே குற்றச்சாட்டுக்கு ஆளான சூப்பர்வைசர் பணி மாறுதல் செய்தார்கள் அப்பாவி விவசாயிகளான எங்களுடைய கேள்வி. 

லட்சக்கணக்கில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழித்த வங்கி ஊழியர்களை பணி மாறுதல் செய்வது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகள் துரோகம் செய்ததாகவே கருதுகிறோம். என பாஜக கந்திலி ஒன்றிய செயலாளர் எம் சுரேஷ் குமார்  தெரிவித்தார்.

- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/