திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கருடசேவை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 செப்டம்பர், 2023

திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கருடசேவை.

தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவ திருப்பதிகளில் 8வது தலமான திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றம் நடந்து. 5-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 7.30 மணிக்கு திருமஞ்சனம். 8 மணிக்கு உற்சவர்  வைத்தமாநிதி மாட வீதி புறப்பாடு நடந்தது. 


10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம்.ஹோமம் பூர்ணாகுதி திருவாராதனம். சாத்துமுறை நடந்தது  பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5  மணிக்கு சாயரட்சை. 5.30 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வார் இருவரும் வாகன குறட்டிற்கு வந்து அலங்காரம் நடைபெற்றது.  இரவு 7 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி கருட வாகனத்திலும் மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் மாட வீதி. ரதவீதி புறப்பாடு நடந்தது. செப்  19 தேரோட்டம் நடைபெறுகிறது.


இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரகு. பாலாஜி. சீனிவாசன். சுந்தரம். ஸ்தலத்தார் திருவாய்மொழி பிள்ளை ஸ்ரீ தரன் ஸ்வாமி சடகோபன் ஸ்வாமி ஆத்தான் கீழத்திருமாளிகை சுவாமி ராமானுஜன் நிர்வாக அதிகாரி அஜித் தக்கார் கோவல மணிகண்டன் ஆய்வாளர் லோகநாயகி முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/