ஊஞ்சலில் ஆடிய மாணவி சேலை கழுத்தை இறுக்கி பலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 செப்டம்பர், 2023

ஊஞ்சலில் ஆடிய மாணவி சேலை கழுத்தை இறுக்கி பலி.

திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருமங்கலம் அருகே சாத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி முத்து மாரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் முத்துமாரி தன்னுடைய தாய், தந்தை யுடன் வசித்து வருகிறார். 


முத்துமாரியின் மூத்த மகள் ஷீலா (வயது14). இவர் சாத்தங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று முத்துமாரி அவரது தாயாருடன் சேர்ந்து வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷீலா தொட்டி லில் ஊஞ்சல் ஆடி கொண்டிருந்தார். அப் போது எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் சேலை முறுக்கியது. இதில் அவர் மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தார். மாலையில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த முத்துமாரி மற்றும் அவரது தாயார் தனது மகள் தொட்டிலில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 


இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/