காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குத்தனூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படும் கட்டிடத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது.
இதில் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட குழு சேர்மன் படப்பை மனோகர், குன்றத்தூர் ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மையம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராஜலக்ஷ்மி ராஜி, மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தீபக் மற்றும், ஊராட்சி செயலர் மொய்தீன், திமுக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக