கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஆர். வி. பி.மருத்துவமனையின் இயங்கி வருகின்றது, இதன் நிறுவனர் மருத்துவர் பி. கதிரவன் அவர்களின் பிறந்தநாளான இன்று பொதுமக்கள் கேக் வெட்டி விமர்சியாக கொண்டாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.வி.பி. பிதனியார் மருத்துவமனை கடந்த ஐந்து ஆண்டுகளாக புவனகிரி பகுதியில் இயங்கி வருகின்றது இந்த தனியார் மருத்துவமனையை மருத்துவர் பி.கதிரவன் அவர்கள் நிர்வகித்து வருகிறார் இவர் புவனகிரி பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கிராமங்களுக்கே சென்று இலவச சிகிச்சை அளித்து வருகிறார் கொரோனா காலகட்டங்களில் பல்வேறு கிராமப் பகுதியில் இருந்து வரும் நோயாளிக்கு உரிய சிகிச்சை அளித்து உயிர்களைக் காத்தது குறிப்பிடத்தக்கது மேலும் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வறுமையின் காரணமாக மருத்துவ உதவிக்கு பணம் கையில் இல்லாத போதும் அவர்களுக்கு இலவச மருத்துவம் செய்து வருவதும் இலவச ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று மருத்துவர் பி.கதிரவன் அவர்களின் பிறந்தநாளை அறிந்த அப்பகுதியினர் அதிகாலையிலேயே மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர் பின்னர் அனைவரும் ஒன்று திரன்டு மருத்துவர் உடன் கேக் வெட்டி அவரின் பிறந்த நாளில் அவரை உற்சாகப்படுத்தினர் மேலும் மருத்துவமனையில் குவிந்த பொது மக்களுக்கு சிறப்பான உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏழை எளிய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மருத்துவர் கதிரவன் அவர்களுக்கு அப்பகுதியினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக