தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தி செயல்படுத்திய நிலையில் இந்த திட்டம் பற்றி இழிவு படுத்தி முகம் சுளிக்கும் அளவிற்கு செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மாணவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில் இதன் தொடர்ச்சியாக திருப்பூர் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் டி.ஒய்.எப்.ஐ, ஏ.ஐ.டி.டபில்யு.ஏ, எஸ்.எப்.ஐ, த.தீ.ஒ.மு. அமைப்புகள் தினமலர் நாளிதழை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக