மானாமதுரையில் மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

மானாமதுரையில் மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறைந்த அளவு பரப்பில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாய பெருமக்களுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 53 விவசாய பயணாளிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்களை மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் வழங்கினார்கள். 


இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட துணை செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு சேங்கைமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் திரு சுப. மதியரசன், நகர் கழக செயலாளர் திரு க. பொன்னுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நகர் மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு கடம்பசாமி, இளையான்குடி பேரூராட்சி தலைவர் திரு நஜ்முதீன், திருப்புவனம் நகர் கழக செயலாளர் திரு நாகூர் கனி, நகர் மன்ற துணை தலைவர் திரு பாலசுந்தர், ஒன்றிய குழு துணை தலைவர் திரு முத்துசாமி, இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு தமிழ்மாறன், இளையான்குடி பேரூராட்சி துணை தலைவர் திரு இப்ராஹீம், திருப்புவனம் பேரூராட்சி துணை தலைவர் திரு ரஹ்மத்துல்லாகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும் இதில் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் திருமதி இந்திரா, உதவி பொறியாளர்கள் திரு வனராஜ்குமார், திரு சண்முகம், திருமதி சார்கின்விமலா, திருமதி விஜயராணி, வட்டாச்சியர் திரு ராஜா, பொறியாளர் திரு நாகராஜன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள் மற்றும் விவசாய பெருமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

- செய்தியாளர் லிவிங்ஸ்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/