காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்கப்பணி ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்த, ஆலோசனைக் கூட்டம். பேரூராட்சி சேர்மன்செந்தில் தலைமையில் நடந்தது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 செப்டம்பர், 2023

காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்கப்பணி ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்த, ஆலோசனைக் கூட்டம். பேரூராட்சி சேர்மன்செந்தில் தலைமையில் நடந்தது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி, பஸ் நிலையம் விரிவாக்கப் பணிக்காக நடைபாதை கடைகள், மற்றும் ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது குறித்த ஆலோசனைக்  கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரூராட்சி சேர்மன் ஆர்.கே. செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.  


காரியாபட்டி பஸ் நிலையம் விரிவாக்கப் பணி மற்றும்    மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அதற்கான வேலைகளை கடந்த வாரம் தொடங்கிவைத்தார். காரியாபட்டி பேருந்து நிலையத்தை சுற்றி ஏராளமான  நடைபாதை கடைகாரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.


மழை நீர் வடிகால் அமைக்கும் பணி செய்வதற்காக இடைஞ்சலாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது என்றும், வியாபாரிகளுக்கு மாற்று இடத்தில் தற்காலிகமாக கடைகள் நடத்துவதற்கும், பயணியர் நிழற்குடை எதிர்புறம். பேரூந்துகள் நிறுத்தி செல்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


மழை நீர் வடிகால் அமைக்க இடையூராக சாலை ஓர ஆக்கிரமிப்   புக்களை நெடுஞ்சாலை துறையினர் அகற்றுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், பேரூராட்சி தலைவர் செந்தில் பேசும் போது: காரியாபட்டியில் பல ஆண்டுகளாக இடநெருக்கடியில் இருந்த பஸ் நிலையத்தை விரிவாக்க செய்யும் பணி நடைபெறவுள்ளது. பேரூந்து நிலையம், பயணியர் நிழற்குடை சுற்றி நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு  அதற்கு பதிலாக வியாபாரிகளுக்கு  தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.


கூட்டத்தில், மண்டல துணை தாசில்தார் அழகு பிள்ளை நெடுஞ்சாலை    துறை உதவி பொறியாளர் பெரிய திருமால், ஆய்வாளர் அழகர் ராஜா  விவசாய சங்க தலைவர் அம்மாசி  பேரூராட்சி கவுன்சிலர்கள் தீபா, சங்கரேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/