கோவை சூலூரில் திமுக ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

கோவை சூலூரில் திமுக ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியம் இருகூர் பேரூராட்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், இருகூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பேரூராட்சி தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்வில் அண்ணா பிறந்தநாள் விழா, இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், அணிகள் நியமனம் மற்றும் கழக ஆக்க பணி உள்ளிட்டவை  ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வில் திமுக மாவட்ட துணை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருகூர் உதய பூபதி, மீனவரணி அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட செந்தில் ஆகியோருக்கு பேரூராட்சி தலைவர் ஆ. சந்திரன் வாழ்த்து தெரிவித்து, சால்வை அணிவித்து கௌரவித்தார்.


நிகழ்வில் ராஜேந்திரன், தீனதயாளன், இருகூர் சிவா, வார்டு செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/