தூத்துக்குடி பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

தூத்துக்குடி பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று 20.109.2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்  உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.



அதன்படி புதன் கிழமையான நேற்று (20.09.2023) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 2 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 47 மனுதாரர்கள் என மொத்தம் 49 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். அப்போது புகார் மனு அளிப்பதற்காக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வந்ததையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தரைதளத்திற்கு இறங்கி வந்து அவர்களிடம் மனுவை நேரடியாக பெற்றுக் கொண்டார்.



பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/