நாட்றம்பள்ளி அருகே ஒரு வயது பெண் குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு! மாதாமாதம் ஒரு லட்ச ரூபாய் செலவு! அரசு உதவி கரம் நீட்டாவிடில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை தாய் கண்ணீர் மல்க கதறல்!. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

நாட்றம்பள்ளி அருகே ஒரு வயது பெண் குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு! மாதாமாதம் ஒரு லட்ச ரூபாய் செலவு! அரசு உதவி கரம் நீட்டாவிடில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை தாய் கண்ணீர் மல்க கதறல்!.


நாட்றம்பள்ளி அருகே ஒரு வயது பெண் குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு! மாதாமாதம் ஒரு லட்ச ரூபாய் செலவு! அரசு உதவி கரம் நீட்டாவிடில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை தாய் கண்ணீர் மல்க கதறல்!.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களா மேடு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி வயது 50 இவருடைய மனைவி கலைவாணி வயது 32 இவர்களுக்கு தியா வயது 4 ஹர்ஷினி வயது 1, இந்த நிலையில் ஹர்ஷினி பிறந்த 3 மாதத்தில் நோய் தொற்று ஏற்பட்டு உடல்நிலை சரி இல்லாமல் போய் உள்ளது.


ஐந்து மாத காலமாக தொடர் சிகிச்சையில் பெண் குழந்தை இருந்துள்ளது பின்னர் நோய் தொற்று அதிகமாக தீவிரமாக பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அப்போது ஹர்ஷினி தொடர்ச்சிக்குசையில் இருக்க வேண்டும் இல்லையெனில் உயிருக்கு ஆபத்து என கூறியுள்ளனர் இதன் காரணமாக ஒரு மாதத்திற்கு மட்டும் ஒரு லட்ச ரூபாய் சிகிச்சைக்காக செலவாகி உள்ளது.


எனவே ஹர்ஷினியின் தந்தையான ராமமூர்த்தி சொந்த ஊரில் இருந்தால் தனது குழந்தையை காப்பாற்ற முடியாது எனக்கூறி வெளியூருக்கு வேலைக்கு சென்று தற்போது வரை குழந்தையின் சிகிச்சைக்காக பணம் அனுப்பி வருகிறார். குழந்தையின் சிகிச்சைக்கு தற்போது வரை சுமார் 20 லட்ச ரூபாய் வரை குழந்தையின் பெற்றோர்கள் செலவு செய்துள்ளனர்.


மேலும் வீட்டிலேயே குழந்தைக்கு உண்டான ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் அனைத்து விதமான கருவிகளையும் வாங்கி வைத்துள்ளனர் அதனைத் தொடர்ந்து மாதத்திற்கு நான்கு முறை வேலூரில் தனியார் மருத்துவமனைக்கும் சென்று வருகின்றனர்


தனது குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்படுவதை தன்னால் பார்க்க முடியவில்லை என குழந்தையின் தாயார் கலைவாணி கண்ணீர் மல்க கூறினார். மேலும் தனது குழந்தை இதுபோல் அவதிப்படுவதால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவிலும் உள்ளோம் எனவே தமிழக அரசோ அல்லது மாவட்ட நிர்வாகமும் தனது குழந்தைக்கு உயிர் பிழைக்க உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார் கலைவாணி ஹர்ஷினியின் தாயார்.


- மாவட்ட செய்தியாளர். மோ. அண்ணாமலை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/