கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நீட் எதிர்ப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் கடைபிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நீட் எதிர்ப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் கடைபிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


நீட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்த தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு முடிவில் படி, இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி நீட் தேர்வு திணிப்பால் தற்கொலை செய்யப்பட்ட தங்கை அனிதாவின் நினைவு நாளையொட்டி நீட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வை மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு (FSO-TN) சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று காலை 10 மணி அளவில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ ஆலோசனையின் படி நடைபெற்றது.

நீட் எதிர்ப்புப் போராளி தங்கை அனிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அது சமயம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூர் மாணவர் அணி திமுக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் , கழக நிர்வாகிகள் , மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/