வேலூர் மாவட்டம் பாபி குழுமத்தில் நீராவி ஆட்டோ நிறுவனம் திறப்பு விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

வேலூர் மாவட்டம் பாபி குழுமத்தில் நீராவி ஆட்டோ நிறுவனம் திறப்பு விழா.


வேலூர் மாவட்டம் ஓட்டேரியில் பாபி குழுமத்தில் நீராவி ஆட்டோ நிறுவனம் பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முன்னிலை ஜெகன் வேலூர் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் ,பாபி கதிரவன் 53 வது மன்ற உறுப்பினர் முன்னிலையில் தலைமை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக Rtn. P. பரணிதரன் ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக J. L. ஈஸ்வரப்பன் MLA ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திமுக இளைஞரணி அமைப்பாளர் ராணிப்பேட்டை மாவட்டம். கலந்து கொண்டு விழாவில் குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்தார்.  


நிறுவனத்தின் உரிமையாளர் Rtn விக்னேஷ் கதிரவன் கூறுகையில் இந்த வாகனத்தில் மூலம் வீட்டுக்கே சென்று நான்கு சக்கர வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களையும் நீராவி மூலம் சுத்தம் செய்யலாம் என்றும் இதற்கு தேவைப்படும் தண்ணீர் சுத்தமான மினரல் வாட்டர் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் வெளிப்புறங்களில் மட்டுமல்லாமல் இன்டீரியர் என சொல்லப்படும் காருக்கு உள்புறமான சீட்டுகள் மற்றும் டாப் அனைத்தையும் நீராவி மூலமாக சுத்தம் செய்யப்படும் என தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் மக்கள் பணி இயக்கம் டாக்டர் ரவிசங்கர் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ் மற்றும் பல்வேறு அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் நீராவி ஆட்டோ நிறுவனத்தின் உரிமையாளர் Rtn . விக்னேஷ் கதிரவன் உடன் நண்பர்கள் தொழிலாளர்கள் ஓட்டேரி பகுதியில் முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் பாக்கியராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/