சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் மேலப்பிடாவூரில் உள்ள திருவிழா நாடகத்தை கண்டு களிக்க சென்ற இடத்தில் சில இளைஞர்கள் மது போதையில் இவரிடம் தகாத வார்த்தையில் திட்டியதோடு தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே அந்த இளைஞர்கள் பீர் பாட்டிலால் அஜித்குமாரை பலமாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்தில் படுகாயம் அடைந்த அஜித்குமார் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் தீவிர விசாரணை மேற்கொண்டு இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக