வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம், ஊனை மோட்டூர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள காரணத்தினால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆய, அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஊனை மோட்டூர் கிராமத்தில் 11.09.2023 அன்று கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வனத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
எனவே ஊனை மோட்டூர் கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார் .
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக