தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தமிழக காருகுறிச்சி தேவர் மகாஜன சங்கத்தின் மகாசபை பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூா் வடக்கு ரத வீதியில் உள்ள பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் கவுன்சிலர் நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை குமார், கணேசன், நாராயணன் மற்றும் வெற்றிச்செழியன் வழங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக முக்காணி ஊராட்சி மன்ற தலைவர் தனம், பேராசிரியர் டாக்டர் ஜெயந்தி, உதவி செயற்பொறியாளர் டாக்டர் சிவ கீர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர். மாணவி ஜெயதர்ஷினி வரவேற்பு நிகழ்த்தினார், பொருளாளர் வேலுமணி ஆண்டு அறிக்கை வாசித்தார்.
விழா ஏற்பாடுகளை தமிழக காருகுறிச்சி தேவர் மகாஜன சங்கம், தேசிய தெய்வீக அறக்கட்டளை மற்றும் காருகுறிச்சி மறவர் கல்வி அறக்கட்டளையும் இணைந்து செய்திருந்தனர். விழா முடிவில் சங்க மேலாளர் கந்தன் நன்றியுரை வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக