மானாமதுரையில் உள்ள கிருங்காக்கோட்டை ஸ்ரீ அழகுநாச்சி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நிறைவடைந்தது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 செப்டம்பர், 2023

மானாமதுரையில் உள்ள கிருங்காக்கோட்டை ஸ்ரீ அழகுநாச்சி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நிறைவடைந்தது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கிருங்காகோட்டை கிராம எல்லையின் வைகை ஆற்றங்கரையில் அமைந்து அருள்பாலித்து வரும் கிருகாங்கோட்டை கிராமத்திற்கு பாத்தியமான அருள்மிகு ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்ற முடிந்தது. 


இந்த கும்பாபிஷேகமானது மானாமதுரை ஶ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கோயிலை சேர்ந்த சிவஸ்ரீ தெ. தெய்வசிகாமணி பட்டர் அவர்களின் தலைமையிலும், ஊர் பொதுமக்கள், கிராம மற்றும் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் புனஸ்கார பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது. இவ்விழாவின் இறுதியாக பொதுமக்கள் அனைவருக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கிருங்காகோட்டை ஊர் பொதுமக்கள், மானாமதுரை மற்றும் கிருங்காகோட்டையை சுற்றுவட்டார பகுதி பக்தகோடி பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெற வேண்டி வழிபாட்டில் பங்கேற்றனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/