எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கங்கம் மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கங்கம் மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

44 தொழிலாளர்களின் உரிமை சட்டங்களை பாதுகாத்திடு, வேலையில்லா திண்டாட்டத்தை தடுத்திடு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திடு என, முப்பெரும் கோரிக்கையை வலியுறுத்தி மதுரை கோ.புதூர் பேருந்து நிலையம் அருகே எஸ்.டி.டி.யூ தொழிற் சங்கத்தினர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தொழிற்சங்க வடக்கு மாவட்டத் தலைவர் நிஸார், தலைமை வகித்தார்.


இணைச் செயலாளர் பஹ்ர்தீன் சாதிக், வரவேற்றார், செயலாளர் மன்சூர் தொகுத்து வழங்கினார். இறுதியாக, பொருளாளர் ஜவஹர் நன்றியுரை நிகழ்த்தினார். தொழிற்சங்க மாநில செயலாளர் ரவூப் நிஸ்தார், மதுரை மண்டலத் தலைவர் அப்துல் சிக்கந்தர், எஸ்.டி.பி.ஐ. கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/