கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தொந்தரவு என்று நமது தமிழ் குரல் இணையதளம் மூலம் செய்தி வெளியிட்டு இருந்தோம் இச்செய்தியின் எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிப்பட்டி ஊராட்சி அந்தேரிப்பட்டி கூட்ரோடு HP பெட்ரோல் நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களுக்கு தொந்தரவாக தேசிய நெடுஞ்சாலையில் கற்கள் மற்றும் சுமார் 5 அடி பள்ளம் மழையின் காரணமாக ஏற்பட்டது.
இதை சரி செய்ய வேண்டும் என்று நமது செய்தியின் மூலம் வெளியிட்டிருந்தோம், இச்செய்தியின் எதிரொலியால் தற்போது மரண குழி சரி செய்யப்பட்டது , இதற்காக நெடுஞ்சாலை துறைக்கும் மாவட்ட துறைக்கும் தமிழ் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக