கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே ரிஷிவந்தியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது,இதற்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பெருமாள், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜ்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன்,சவரி ராஜன், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானவேல் அனைவரையும் வரவேற்றார்.
இதில் 358 மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா சைக்கிளை ஒன்றிய பெருந்தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன் வழங்கி சிறப்புரையாற்றினார், மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வினிதா மகேந்திரன், ராமமூர்த்தி,பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வளர்மதி,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயலட்சுமி, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக