டாக்டர் கலாம் பார்மசி கல்லூரியில் உலக மருந்தாளுநர்கள் தின விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

டாக்டர் கலாம் பார்மசி கல்லூரியில் உலக மருந்தாளுநர்கள் தின விழா


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆவணம் டாக்டர் கலாம் பார்மசி கல்லூரியில் செப்டம்பர் 25 உலக மருந்தாளுநர்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. 


இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் திரு. N.அன்பழகன் தலைமை வகித்து வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஓய்வு பெற்ற மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குனர் திரு S. ரவிக்குமார் அவர்கள் கலந்துகொண்டு உலக மருந்தாளுநர் தினத்தின் வரலாறு, மருந்தாளுநர் படிப்பின் வேலை வாய்ப்பு, சுகாதார பாதுகாப்பு அமைப்பில் மருந்தாளுநரின் பல்வேறு பங்குகள் மற்றும் சமூக மருந்தாளுநரின் பங்குகள் பற்றியும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு உரை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.


மேலும் இவ்விழாவில் டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் M.மதிவாணன் மற்றும் பார்மசி கல்லூரியின் துணை முதல்வர் B.பரிமளா தேவி மற்றும் துறை தலைவர்கள் V.லோகநாதன், S.விஜயராஜ் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள், அலுவலக உதவியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். மேலும் கல்லூரி மாணவ, மாணவிகளின் உடல் உறுப்பு தானம் செய்வதில் மருந்தாளுநரின் பங்கு பற்றிய விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 


இறுதியாக கல்லூரியின் பேராசிரியர் S.நவநீதகிருஷ்ணன் நன்றி உரை வழங்கி இவ்விழா இனிதே நிறைவு பெற்றது.


- செய்தியாளர்  த.நீலகண்டன் பேராவூரணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/