கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கணவன் இருந்த சோகத்தில் மனைவியும் இறந்த பரிதாபம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 செப்டம்பர், 2023

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கணவன் இருந்த சோகத்தில் மனைவியும் இறந்த பரிதாபம்

கணவன் இருந்த சோகத்தில் மனைவியும் இறந்த பரிதாபம்



 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊமையனூர் MGR நகரைச் சேர்ந்தவர் திருப்பதி (60), இவர் சென்னம்மாள் என்பதை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குழந்தை உண்மை காரணமாக கோகிலா என்பவரை மணந்து கங்கா (20) கௌரி (18)இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.


 கடந்த மாதம் தனது கிராமத்தின் அருகே  ஏற்பட்ட விபத்தில் இரண்டு கால்களும் அறுவை சிகிச்சை பெற்று எட்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தனர்.


 காலை 10 மணி அளவில்  திடீரென்று திருப்பதி உயிரிழந்தார். அவர் இறுதிச் சடங்கை முடித்து பின், கணவன் இறந்த சோகத்தில் துக்கம் தாங்காமல் மனைவி கோகிலாவும் , இரவு பத்து மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.


 திருப்பதி கோகிலா தம்பதியின்  மூத்த பெண் கங்காவுக்கு திருமணம் நடந்தது ஒரு வருடம் ஆனது. இளைய பெண் கௌரி தற்போது பெற்றோரை இழந்து ,  ஆதரவற்று நிற்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.


 கணவன் இறந்த ஆறு மணி நேரத்தில்  மனைவியும் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.


கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
எஸ் சத்தியநாராயணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/