சோழவந்தான் அருகே.முள்ளிபள்ளத்தில் வ உ சி பிறந்த தின விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

சோழவந்தான் அருகே.முள்ளிபள்ளத்தில் வ உ சி பிறந்த தின விழா.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே, முள்ளி பள்ளம் வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக, சங்கக் கட்டிடத்தில் கப்பலோட்டிய தமிழன் வ உ   சிதம்பரனார் 152 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, உறவின்முறை சங்கத் தலைவர் மருத வீரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முருகன் சுந்தர் ஆகியோர் வரவேற்றனர். சங்கர் தாசன், விவேக், மதன், முனியாண்டி, மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். வ உ சி திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து சக்கரை பொங்கல் வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/