பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2023-24 கல்வி ஆண்டிற்கான 100% இலவச பேருந்து பயண அட்டை தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் வழங்கி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செட்டி மண்டபம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் வி.சுரேஷ் தலைமை வகித்து 68 மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான கட்டணமில்லா பேருந்து அட்டைகளை வழங்கினார்.
தொடர்ந்து கும்பகோணம் பகுதி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் 100%வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுநாள் வரை இலவச பேருந்து பயண அட்டைக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்து இலவச பேருந்து பயண அட்டைகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக