விவசாயி மீது அறுந்து தொங்கிய மின்கம்பி கழுத்தில் சுற்றி பலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 செப்டம்பர், 2023

விவசாயி மீது அறுந்து தொங்கிய மின்கம்பி கழுத்தில் சுற்றி பலி.

சேத்தியாத்தோப்பு அருகே வயலுக்கு சென்ற விவசாயி மீது அறுந்து தொங்கிய மின்கம்பி கழுத்தில் சுற்றி பலி.



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அகர ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மணிகண்ட சோழன் (38).இவர் அருகே உள்ள பெருவரப்பூர் பகுதியில் உள்ள கரும்பு வயலுக்கு புல் அறுக்க வயல் வரப்பில் நடந்து சென்றபோது கரும்பு வயலில் அறுந்து தொங்கிய உயரழுத்த மின்கம்பி எதிர்பாராமல் மணிகண்ட சோழனின் கழுத்தில் சிக்கி மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இறந்த மணிகண்ட சோழனின் உடல் வயலிலேயே கிடந்த நிலையில். இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் தமிழக மின்வாரியத் துறையை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் அதிகாரிகளை முற்றுகையிட்டனர் .



அப்போது மின்வாரியத் துறை மற்றும் காவல் துறையினர் முதலில் இறந்தவரின் உடலை எடுக்க விடுங்கள் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர். மேலும் அரசு வழங்குகின்ற ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு கிடைக்கும் என்று தெரிவித்தனர். ஆனால் இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தந்தால் மட்டுமே சடலத்தை எடுக்க விடுவோம் என்று வாக்குவாதம் செய்தனர்.



 மூன்று மணி நேர கால தாமதத்திற்கு பிறகு காவல்துறையினர் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/