ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சனாதனத்தை பற்றி பேசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 செப்டம்பர், 2023

ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சனாதனத்தை பற்றி பேசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி யில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர். அர்ஜுன் சம்பத் அறிவுறுத்தலின் படி மாநில அமைப்பாளர் செல்வம் தலைமையில் தமிழக இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

மாவட்ட செயலாளர் மகேந்திரன் மாவட்ட தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சனாதான ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி கலந்து கொண்டு பேசினார் அப்போது சனாதனத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றார். 

அதை பல்வேறு அமைப்புகள் எதிர்த்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/