புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டது. வேந்தன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு வேந்தன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சுமதி ராஜூ தலைமையேற்று கூட்டத்தை தொடங்கிவைத்தார்.
அப்பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் கவிதா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சிவமணி, பள்ளி ஆசிரியர் அமலசகாயமேரி ஆகியோரின் சிறப்புரையாற்றினர். பின்னர் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டத்தை ஊராட்சி மன்றத்தலைவர் சுமதி ராஜூ தொடங்கி வைத்தனர்.மேலும் பள்ளி வளர்ச்சிக்கு உதவிய புரவலர்களுக்கு ஊராட்சி மன்றம், பள்ளியின் சார்பில் பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.கலந்து கொண்டு சிறப்பித்த அனைவரும் ஆசிரியர் சிவக்கொழுந்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக