தண்ணீர் விரயமாவதை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த அவர்கள் உடனடியாக அருகில் உடைந்து கிடந்த பிளாஸ்டிக் பைப்பை எடுத்து ஏற்கனவே தண்ணீரில் ஊறி ஈரமாகி சொத சொதப்பான களிமண்தரையில் பிளாஸ்டிக் பைப்பை ஓரிரு முறை ஓங்கிக் குத்தியதால் பைப்பிற்குள் கலி மண்நிரம்பி விட்டது, அதன் மறுபக்கத்தை தண்ணீர் விரயமாகிக் கொண்டிருந்த பைப்பில் பொருத்தினர். அதிசயம் என்னவென்றால் ஆர்டீசியன் ஊற்று போல் பொங்கி மேலே வந்த தண்ணீர் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.இதனால் தண்ணீர் விரயமாகி அருகிலுள்ள திடல் முழுவதும் நிரம்பியநீர் தடுக்கப்பட்டது.
இதை சரி செய்யும்பொறுப்பில் உள்ளவர்கள் இதை சரிப்படுத்த முயலாத நிலையில் சிறுவர்களின் இந்த சமயோசிதமான செயல்பாடு பலரையும் வியக்க வைத்தது. அரை நிமிடத்தில் தண்ணீர் விரயம் ஆவதை தடுத்து நிறுத்திய சிறுவர்களின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இப்பகுதிகளில் குடிநீர் பைப் லைனை சரியான முறையில் பராமரிப்பு பணிகள் செய்து தண்ணீர் விரயமாவதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக