சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கஞ்சா விற்றவரை கையும் களவுமாக பிடிபட்டார், காவல்துறை நடவடிக்கை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்கப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரின் சோதனையில் ஒருவரை கையும் களவுமாக மடக்கி பிடித்துள்ளனர். இந்நபர் மானாமதுரையை அடுத்த ராஜகம்பீரத்தை சேர்ந்த சிங்கராஜ் என்பவரின் மகன் வேல்முருகன் என்பதும் இவர் கடந்த சில நாட்களாக மானாமதுரை சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இவர் கைவசம் வைத்திருந்த கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா புலக்கம் அதிகரித்து வருகிறது என்ற தகவலின் அடிப்படையில் போலீசார் தனி கவனம் செலுத்தி தேடுதல் வேட்டையிலும் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா விற்பனை குற்றங்களை கட்டுப்படுத்த போலீசார் பலர் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் குண்டர்களை பிடிக்க காவல்துறைக்கு ஏதுவாக பொதுமக்களும் தகவல்களை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக